sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நல்லாட்டூரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பதில் தாமதம் ஏன்?

/

நல்லாட்டூரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பதில் தாமதம் ஏன்?

நல்லாட்டூரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பதில் தாமதம் ஏன்?

நல்லாட்டூரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பதில் தாமதம் ஏன்?


ADDED : ஜன 27, 2024 11:18 PM

Google News

ADDED : ஜன 27, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் கிராமத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம், அருகே இயங்கி வந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.

இது குறித்து கடந்த எட்டு மாதங்களுக்கு முன் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை உடனடியாக அகற்றி, அதே இடத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 13.57 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டியது. கட்டட பணிகள் முடிந்து இரு மாதங்கள் ஆகின்றன.

ஆனால் இன்று வரை அங்கன்வாடி மையம் திறந்து பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் நல்லாட்டூர் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us