sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊரப்பாக்கத்தில் சாலை விபத்து கணவன் கண்முன் மனைவி பலி

/

ஊரப்பாக்கத்தில் சாலை விபத்து கணவன் கண்முன் மனைவி பலி

ஊரப்பாக்கத்தில் சாலை விபத்து கணவன் கண்முன் மனைவி பலி

ஊரப்பாக்கத்தில் சாலை விபத்து கணவன் கண்முன் மனைவி பலி


ADDED : ஜன 27, 2024 01:40 AM

Google News

ADDED : ஜன 27, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் அய்யனாரப்பன், 55. இவரின் மகன் ஹரிதாஸ், 24, என்பவருக்கும், சந்தியா, 20, என்பவருக்கும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

இவர்கள், சென்னை, மாதவரம், காவாங்கரை பகுதியில் வசித்து வருகின்றனர். ஹரிதாஸ் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு, மூன்று பேரும் ஹீரோ ஹோண்டா இரு சக்கர வாகனத்தில், சென்னை மாதவரத்தில் இருந்து திண்டிவனம் சென்றனர். பின், மூவரும் ஒரே பைக்கில், நேற்று சென்னை திரும்பிய போது, ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் நிலை தடுமாறி மூவரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது, பின்னால் வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து, சாலையில் விழுந்த சந்தியா மீது ஏறி இறங்கியதில், சந்தியா சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஹரிதாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அய்யனாரப்பனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தால், ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலன் விசாரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தியாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த ஹரிதாஸ், அய்யனாரப்பன் ஆகியோர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us