sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சோழவரம் - சீமாவரம் தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

/

சோழவரம் - சீமாவரம் தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

சோழவரம் - சீமாவரம் தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

சோழவரம் - சீமாவரம் தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?


ADDED : ஜன 17, 2024 08:13 PM

Google News

ADDED : ஜன 17, 2024 08:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில் இருந்து சோத்துப்பெரும்பேடு, செக்கஞ்சேரி, நெற்குன்றம், அட்டப்பாளையம் வழியாக சீமாவரம் வரை, மாநகர பேருந்துகள், 114எஸ், 57ஜெ ஆகியவை இயக்கப்படுகின்றன.

இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான மாணவர்கள் சோழவரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கின்றனர்.

இந்த வழித்தடத்தில் காலை, மாலை நேரங்களில் பேருந்து சேவை குறைவாக இருப்பதால், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:பள்ளி மாணவர்களின் வசதிக்காக காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த தடம் எண், 114எஸ், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

தற்போது வரை அந்த பேருந்து, பள்ளிக்கு சென்று வரும் நேரங்களில் இயக்கப்படாமல் உள்ளது.இதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, கல்வியும் பாதிக்கிறது. இந்த வழித்தடத்தில், 30க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன.

பேருந்து சேவை குறைவாக இருப்பதால் மாணவர்கள் மட்டுமின்றி கிராமவாசிகளும்ம் சிரமப்படுகின்றனர். மாணவர்கள், கிராமவாசிகளின் நலன் கருதி, காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us