sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

டிராக்டர் - கார் மோதி விபத்து காங்., பெண் கவுன்சிலர் மரணம்

/

டிராக்டர் - கார் மோதி விபத்து காங்., பெண் கவுன்சிலர் மரணம்

டிராக்டர் - கார் மோதி விபத்து காங்., பெண் கவுன்சிலர் மரணம்

டிராக்டர் - கார் மோதி விபத்து காங்., பெண் கவுன்சிலர் மரணம்


ADDED : ஜூன் 27, 2025 03:12 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி நடுக்கடை தெருவை சேர்ந்தவர் அசோகன் மனைவி அன்புராணி, 55; காங்., துாத்துக்குடி தெற்கு மாவட்ட எஸ்.சி, - எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவரான இவர், உடன்குடி டவுன் பஞ்., 8வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்தார்.

உடல்நிலை பாதிப்பு எற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நேற்று, 'இன்னோவா' காரில் மதுரைக்கு சென்றார். அவரது மகன் நேரு, 31, காரை ஓட்டினார். மருமகள் இந்து உடன் இருந்துள்ளார். எட்டையபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

காரின் முன்பக்கம் அப்பளம்போல நொறுங்கியதால், முன் இருக்கையில் அமர்ந்திருந்த அன்புராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேரு, இந்து லேசான காயமடைந்தனர். மாசார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us