sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தேடப்பட்ட கொள்ளையன் துப்பாக்கி முனையில் கைது

/

தேடப்பட்ட கொள்ளையன் துப்பாக்கி முனையில் கைது

தேடப்பட்ட கொள்ளையன் துப்பாக்கி முனையில் கைது

தேடப்பட்ட கொள்ளையன் துப்பாக்கி முனையில் கைது

1


ADDED : மே 27, 2025 04:26 AM

Google News

ADDED : மே 27, 2025 04:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி; தென்மாவட்ட போலீசாரால் தேடப்பட்டு வந்த முகமூடி கொள்ளையன், துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் சந்திரகுமார், 34. இவர் மீது திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உட்பட தென்மாவட்ட காவல் நிலையங்களில், 70க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன.

போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் பைக்கில் வந்த சந்திரகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரை கண்டதும், பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பியோடிய அவரை, தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் சுத்தியல், கத்தி, ஸ்குரு டிரைவர், அரிவாள், கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வீடு மற்றும் கடைகளில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் பழக்கம் கொண்ட சந்திரகுமார், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க, மலைப்பகுதியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இவரை, 17 கொள்ளை வழக்குகளில் போலீசார் தேடி வந்ததுள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai