sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

தாயை கொன்ற மகனுக்கு வலை

/

தாயை கொன்ற மகனுக்கு வலை

தாயை கொன்ற மகனுக்கு வலை

தாயை கொன்ற மகனுக்கு வலை


ADDED : செப் 17, 2025 03:13 AM

Google News

ADDED : செப் 17, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், காசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் டெய்லர் ஆதிமூலம், 64. இவரது மனைவி வெங்கடேஸ்வரி, 54. தம்பதியின் மகன் வெற்றிச் செல்வன், 32. இவர், சென்னையில் ஆடிட்டரின் உதவியாளராக பணிபுரிகிறார்.

ஆதிமூலத்திற்கு சென்னையில் சொந்த வீடு உள்ளது. வீட்டை விற்று பணம் தரக்கோரி, ஆதிமூலத்திடம் 2023ல் தகராறில் ஈடுபட்ட வெற்றிச்செல்வன் கத்திரிகோலால், தந்தையை 14 இடங்களில் குத்தினார். உயிர் தப்பிய ஆதிமூலம், மனைவியுடன் ப.உ.ச., நகரில் மற்றொரு வீட்டில் வசித்தார்.

நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற வெற்றிச்செல்வன், பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார். பயந்துபோன ஆதிமூலம் அங்கிருந்து, காசிநாயக்கன்பட்டியில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்றார்.

அங்கு வந்த வெற்றிச்செல்வன், வீட்டில் தனியாக இருந்த வெங்கடேஸ்வரியை, இரும்பு ராடால் அடித்து கொன்று விட்டு தப்பினார். வெற்றிச்செல்வனை திருப்பத்துார் தாலுகா போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us