sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

சிகிச்சையில் மாணவர் 'சீரியஸ்' போலி டாக்டர் சுற்றிவளைப்பு

/

சிகிச்சையில் மாணவர் 'சீரியஸ்' போலி டாக்டர் சுற்றிவளைப்பு

சிகிச்சையில் மாணவர் 'சீரியஸ்' போலி டாக்டர் சுற்றிவளைப்பு

சிகிச்சையில் மாணவர் 'சீரியஸ்' போலி டாக்டர் சுற்றிவளைப்பு


ADDED : செப் 15, 2025 02:10 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்பூர்,:தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற கல்லுாரி மாணவர் உடல்நிலை மோசமான நிலையில், அவருக்கு சிகிச்சையளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பத்தை சேர்ந்தவர் பழனிராஜன், 65; டிப்ளமா ஆயுர்வேதிக் யுனானி படித்துள்ளதாக கூறி, 'குமரன் கிளினிக்' என்ற பெயரில் கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்பாலப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 18. வேலுார் மாவட்டம், டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை கல்லுாரி முதலாமாண்டு மாணவர். ஆக., 26ம் தேதி அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், பழனிராஜன் கிளினிக்கில் சிகிச்சை பெற்றார்.

சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்தவரை, சக மாணவர்கள் மீட்டு, கவலைக்கிடமான நிலையில், சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து, திருப்பத்துார் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சிக்கு புகார் சென்றது.

அதன்படி, ஆம்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் யோகேஸ்வரன் தலைமையிலான குழுவினர், பழனிராஜனின் கிளினிக்கில் விசாரணை நடத்தியதில், அவர் போலி டாக்டர் என தெரியவந்தது. இதையடுத்து, கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.

ஆம்பூர் போலீசார் பழனிராஜனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us