sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வடிகால் கட்டும் பணி போக்குவரத்து பாதிப்பு

/

வடிகால் கட்டும் பணி போக்குவரத்து பாதிப்பு

வடிகால் கட்டும் பணி போக்குவரத்து பாதிப்பு

வடிகால் கட்டும் பணி போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூன் 02, 2024 01:31 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் நொய்யல் ஆற்றின் மீது, ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனி அருகே உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. மங்கலம் ரோடு, பாரப்பாளையம் பிரிவு பகுதியிலிருந்து நொய்யல் ஆறு வழியாக, ராயபுரம் பகுதியை இணைக்கும் விதமாக இப்பாலம் கட்டி பயன்பாட்டில் உள்ளது.

இந்த பாலம் வழியாக வரும் வாகனங்கள் ராயபுரம், விநாயகபுரம் வழியாக வடக்கு பகுதிக்குச் சென்று சேருகிறது. இந்நிலையில், பாலம் அமைந்துள்ள இடத்தில், ராயபுரத்தை இணைக்கும் விநாயகபுரம் வீதியில் மழை நீர் வடிகால் கட்டும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதற்காக இந்த ரோட்டை குறுக்கு வாக்கில் பெரிய அளவிலான குழி தோண்டப்பட்டுள்ளது.

இதனால் இரு சக்கர வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் அமையும் இடத்தில் குடிநீர் குழாய்கள் கேபிள்கள் ஆகியன நிலத்தில் பதிக்கப்பட்டுள்ளன. வடிகால் கட்டும் பணியின் போது இவற்றை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. அதன்பின்னரே, வடிகால் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பணி நடப்பதால், வாகனங்கள் நீண்ட துாரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கட்டுமான பணி நடப்பது தெரியாமல் வரும் வாகன ஓட்டிகள் அதன் பின் மீண்டும் திரும்பி மாற்று வழியில் தங்கள் பயணத்தை தொடருகின்றனர்.






      Dinamalar
      Follow us