sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஈர நிலம்' அந்தஸ்து பெறுகிறதா நஞ்சராயன் குளம்! ம.பி., முதல்வரின் எளிமையான அணுகுமுறை பின்னலாடை துறையினர் புகழாரம்

/

'ஈர நிலம்' அந்தஸ்து பெறுகிறதா நஞ்சராயன் குளம்! ம.பி., முதல்வரின் எளிமையான அணுகுமுறை பின்னலாடை துறையினர் புகழாரம்

'ஈர நிலம்' அந்தஸ்து பெறுகிறதா நஞ்சராயன் குளம்! ம.பி., முதல்வரின் எளிமையான அணுகுமுறை பின்னலாடை துறையினர் புகழாரம்

'ஈர நிலம்' அந்தஸ்து பெறுகிறதா நஞ்சராயன் குளம்! ம.பி., முதல்வரின் எளிமையான அணுகுமுறை பின்னலாடை துறையினர் புகழாரம்


ADDED : ஜூலை 28, 2024 12:15 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடர்த்தியான குடியிருப்புகளும், மக்களும் நிறைந்த நகரப்புறங்களில், துாய்மையான காற்றும், மனதை வருடும் சுற்றுச்சூழலும் கிடைப்பது அரிதான விஷயம் தான்.

அதுவும், தொழில் நகரான திருப்பூரில், காற்று, புகை மாசு என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இருப்பினும், நகரில் இருந்து வெறும் 6 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள நஞ்சராயன் குளம், இயற்கை கொடுத்த வரம் என்று சொல்வதில் மிகையேதும் இருக்க முடியாது. நல்லாறு ஓடையில் வரும் நீர் தான், இக்குளத்துக்கு ஆதாரம்.

ஆண்டுமுழுக்க நீர் ததும்பி நிற்கும் இக்குளம் உள்நாடு, வெளிநாட்டு பறவை கள் வந்து போகும் இடமாகவும், அவற்றின் வாழ்விடமாகவும் மாறியிருக்கிறது. 310 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில் இதுவரை, 157 வகை பறவைகள் வந்து செல்வதாக கணக்கிடப் பட்டிருக்கிறது. அதன் விளைவாக, தமிழக அரசால் பறவைகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வனத்துறை சார்பில் இக்குளத்தை பராமரித்து, மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த குளத்துக்கு,'ஈர நிலம்' என்ற அந்தஸ்து வழங்க, வனத்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரையும், திட்ட அறிக்கையும் என்பது தான், மகிழ்ச்சியான விஷயம்.

திருப்பூர், ஜூலை 28-

தமிழகத்தை போல், மத்திய பிரதேசத்திலும் தொழில்கள் துவங்கி, வளர உதவுங்கள் என, அம்மாநில முதல்வர் மோகன்யாதவ் திருப்பூர் தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், பல்வேறு சலுகைகளை அறிவித்து, தங்கள் மாநிலத்தில் தொழில் துவங்க வருமாறு, தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வாரம், அம்மாநில அரசு அதிகாரிகள் குழு, கோவையில் முகாமிட்டு, தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்தது.

அதனை தொடர்ந்து, அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், கடந்த, 25ம் தேதி, கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் அமைப்பினரை சந்தித்தார். திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்பு நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

அதில், பங்கேற்றதிருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார்துரைசாமி கூறியதாவது:

கோவையில் நடந்த தொழில் முனைவோர் கூட்டத்தில், ம.பி., முதல்வர் மோகன் யாதவ் பேசுகையில், 'தமிழகத்தில் உள்ள தொழிலை, எங்கள் மாநிலத்துக்கு கொண்டு செல்வதற்காக வரவில்லை. தமிழ்நாட்டை போலவே, எங்கள் மாநிலத்தையும் தொழில் வளம் மிகுந்த மாநிலமாக வளர செய்ய வேண்டும். அதற்காக உதவி கேட்டு தான் வந்திருக்கிறோம்,' என்று தனது பேச்சை துவக்கினார்.

மாநில முதல்வர் என்ற பெரிய கெடுபிடி எதுவும் இல்லாமல், சக மனிதனாக அவர், நண்பரை போல் பேசியதும், எதார்த்தமாக பேசியதும், தொழில்துறையினரை மிகவும் கவர்ந்துள்ளது. எங்களை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், ம.பி., முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை காட்டிலும், சிரித்த முகமும், எளிதான அணுகுமுறையும், அதிகளவில் முதலீடுகளை பெற்றுத்தரும் என்று நம்பிக்கையூட்டினோம். அப்போது, மிகவும் உற்சாகமாகி, அனைவரும் ம.பி., வரவேண்டுமெனவும் அழைப்பும் விடுத்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பூர் நஞ்சராயன் குளம்.






      Dinamalar
      Follow us