ADDED : ஜூலை 28, 2024 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சி 48 வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி கோபால்சாமி, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:
நல்லுார் பஸ் ஸ்டாப் அருகே, புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதி. அருகிலேயே கோவில், சர்ச், ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் உள்ளன. இப்பகுதியில் மதுக்கடை அமைத்தால், பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும். எனவே மதுக்கடை அமைக்கக்கூடாது.