ADDED : ஜூன் 20, 2024 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 60வது வார்டில், பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பெருந்தொழுவு ரோடு அண்ணா நகர் பகுதியில் மட்டும், அடுத்தடுத்து, ஐந்து இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. தொடர்ந்து, குடிநீர் வெளியேறி வருவதால் பெருந்தொழுவு ரோடு பல இடங்களில் சேதமாகியுள்ளது. இதனால், ரோடு குண்டும், குழியுமாக மாறி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.