/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உகாண்டா நாட்டு பெண்கள் 2 பேர் கைது
/
உகாண்டா நாட்டு பெண்கள் 2 பேர் கைது
ADDED : ஜூன் 01, 2025 02:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தேவராயம்பாளையம் ஜே.ஜே., நகர் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்கியுள்ளதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.
அதில், உகாண்டா நாட்டின், கம்பாலா பகுதியைச் சேர்ந்த நாகன்வகி ஆயிஷா, 31, எவ்லின் டினா, 34, ஆகிய இரு பெண்கள் விசா காலம் முடிந்தும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த அவிநாசி போலீசார் அவிநாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.