sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒரு கோடி ரூபாய் மோசடி சீட்டு நடத்திய 3 பேர் கைது

/

ஒரு கோடி ரூபாய் மோசடி சீட்டு நடத்திய 3 பேர் கைது

ஒரு கோடி ரூபாய் மோசடி சீட்டு நடத்திய 3 பேர் கைது

ஒரு கோடி ரூபாய் மோசடி சீட்டு நடத்திய 3 பேர் கைது


ADDED : ஜன 26, 2024 01:21 AM

Google News

ADDED : ஜன 26, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மங்கலம் ரோடு, மாகாளியம்மன் கோவில் பகுதியில் 'ஈகிள் சக்தி சிட்ஸ்' என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனத்தை கார்த்திக், அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் கடந்த, ஐந்து ஆண்டுகளாக நடத்தி வந்தனர். 30 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை பல்வேறு குரூப்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

இந்நிறுவனத்தில், சரவணன் என்பவர், மேலாளராகவும், பணம் வசூலிப்பாளராக சசிக்குமார் என்பவர் இருந்தனர்.

சீட்டு நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பலரும் அன்றாடம், வாரம், மாதம் என பல்வேறு வகையில் சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர். சீட்டு முதிர்வு ஏற்பட்டும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் நடத்தி வந்தனர். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்ட பணத்தை கொடுக்காமல் தலைமறைவானதாக திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். கார்த்திக், 40, சரவணன், 45 மற்றும் சசிக்குமார், 31 ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us