sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி ஆற்றில் 3 பேர் பலி; சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

/

அமராவதி ஆற்றில் 3 பேர் பலி; சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

அமராவதி ஆற்றில் 3 பேர் பலி; சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

அமராவதி ஆற்றில் 3 பேர் பலி; சுற்றுலா வந்த இடத்தில் சோகம்


ADDED : ஜன 17, 2024 12:31 AM

Google News

ADDED : ஜன 17, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;கோவைக்கு சுற்றுலா சென்று மதுரை திரும்பி கொண்டிருந்தவர்களில், தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி, மூன்று பேர் பலியாகினர்.

மதுரை மாவட்டம், ஆலாங்குளம் பகுதியை சேர்ந்த, 21 பேர், கோவை ஈஷா யோகா மையத்துக்கு வந்துவிட்டு, நேற்று மாலை, தாராபுரம் வழியாக மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதுார் அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

முதலில், சின்னக்கருப்பு, 31, பாக்கியராஜ், 39, பத்தாம் வகுப்பு படிக்கும் ஹரி, 16 ஆகியோர், ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். ஆற்றில் தண்ணீர் அதிகளவில் இருந்துள்ளது. மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாததால், ஆற்றில் மூழ்கினர். உடன் வந்தவர்கள், அவர்களை காப்பாற்ற முற்பட்டனர்.

ஆனால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், காப்பாற்றும் முயற்சி கைகூடவில்லை. மூவரும் வெள்ளத்தில் சிக்கினர். தகவலறிந்து, தாராபுரம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர தேடுதலுக்கு பின், 3 பேரையும் சடலமாக மீட்டனர். தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us