ADDED : ஜன 16, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;வெள்ளகோவில் அருகே, பச்சாகவுண்டன்வலசு என்ற இடத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக கிடைத்த தகவலின் படி, போலீசார் ஆய்வு செய்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அசோக், 30, வெங்கடேசன், 29, கண்ணன், 39, காமராஜ், 24, ஆறுமுகம், 38, ஆனந்தகுமார், 43 ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 3 சேவல் மற்றும் 2,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

