/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல் ஆளுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
நல் ஆளுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 10, 2024 02:57 AM
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிக்கை:நடப்பு
ஆண்டுக்கான முதல்வரின் நல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட உள்ளது.
அரசு ஊழியர் மற்றும் தனிநபர்; குழுவினர்; அமைப்பு, நிறுவனம், அலுவலகம்
என மூன்று பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.
சிறப்பாக
பணிபுரிவோர், புதிய யுத்திகள், புதிய முயற்சி மற்றும் சிறந்த
வழிமுறைகளை செயல்படுத்தியதன் வாயிலாக, பொதுமக்களுக்கு சிறந்த
சேவை கிடைக்க பணியாளர்களை வழிநடத்துவோர் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு,
நல்லாளுமை விருதுடன், 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை, சுதந்திர தின
விழாவின்போது, முதல்வரால் வழங்கப்படும். தகுதியுள்ளோர், உரிய
ஆவணங்களுடன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில்
இயங்கும் சமூக நல அலுவலகத்தை அணுகி, நாளைக்குள் (11ம் தேதி)
விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.