/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.40 லட்சம் மோசடி பனியன் வியாபாரி கைது
/
ரூ.40 லட்சம் மோசடி பனியன் வியாபாரி கைது
ADDED : மே 26, 2025 11:58 PM

திருப்பூர்,; திருப்பூரில் பனியன் வியாபாரத்தில், 40 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், அமர்ஜோதி நகர், அம்மன் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 38. செகண்ட்ஸ் பனியன் வியாபாரம் செய்து வரும் இவருக்கு, திருப்பூர், வாலிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார், 43 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தொழிலை கூட்டாக செய்ய, சதீஷ்குமாருக்கு, 40 லட்சம் ரூபாய் கொடுத்தார். பணத்தை பெற்ற அவர் தொழிலில் முதலீடு செய்யாமல், பணத்தை தனது கடன் உள்ளிட்டவற்றை அடைக்க சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தினார். இதையறிந்த ஆனந்தகுமார் பணத்தை திரும்ப கேட்டார். பணம் கொடுக்காமல் சதீஷ்குமார் காலம் கடத்திவந்தார்.
இதுதொடர்பாக, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். கமிஷனர் உத்தரவின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர். அதன்பின், மோசடியில் ஈடுபட்ட, சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.