sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுனிதா வில்லியம்ஸ் போல் உருவாக வேண்டும்!  அரசு கல்லுாரி மாணவியருக்கு அறிவுறுத்தல்

/

சுனிதா வில்லியம்ஸ் போல் உருவாக வேண்டும்!  அரசு கல்லுாரி மாணவியருக்கு அறிவுறுத்தல்

சுனிதா வில்லியம்ஸ் போல் உருவாக வேண்டும்!  அரசு கல்லுாரி மாணவியருக்கு அறிவுறுத்தல்

சுனிதா வில்லியம்ஸ் போல் உருவாக வேண்டும்!  அரசு கல்லுாரி மாணவியருக்கு அறிவுறுத்தல்


ADDED : மார் 21, 2025 01:57 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ''அரசு கல்லுாரி மாணவியர் தேசிய, சர்வதேச அளவில் சாதிப்பவராக, சுனிதா வில்லியம்ஸ் போன்றவர்களாக உருவாக வேண்டும்,'' என, கொல்கத்தா, இந்திய தாவர மதிப்பீட்டு ஆய்வக, விஞ்ஞானி (கிழக்கு பிராந்தியம்) தீபு விஜயன் அறிவுரை வழங்கினார்.

திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில், உயிரியல் தொழில் முனைவோர் மாநாடு நடந்தது. கல்லுாரி துறைத்தலைவர் பாலசரவணன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கொல்கத்தா, இந்திய தாவர மதிப்பீட்டு ஆய்வக, விஞ்ஞானி (கிழக்கு பிராந்தியம்) தீபு விஜயன் பேசியதாவது

சுனிதா வில்லியம்ஸ், 286 நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கியிருந்து, பூமியை, 4,577 முறை சுற்றி, 19.52 கோடி கி.மீ., துாரம் பயணம் செய்து, பூமிக்கு திரும்பி சாதனை படைத்துள்ளார். 17 மணி நேரம், விண்கலத்தில் ஒரே நிலையில் அமர்ந்து வருவது சாதாரண விஷயமல்ல.

அறிவியலின் ஒவ்வொரு நிலையை அறிந்து கொண்டு நாம் முன்னேறி கொண்டே இருக்க வேண்டும். இளங்கலை, முதுகலை, ஒரு வேலை என்பதுடன் கல்வித் தேடல் முடிந்து விடக்கூடாது. எண்ணம், இலக்கு மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

அரசு கல்லுாரி மாணவியர் தேசிய, சர்வதேச அளவில் சாதிப்பவராக, சுனிதா வில்லியம்ஸ் போன்றவர்களாக உருவாக வேண்டும். அதற்கான தன்னம்பிக்கை, திறமை, முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். விண்வெளி குறித்த படிப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

மாநாட்டில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், இளம் தொழில் முனைவோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us