sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேங்காய்க்கு விலை கிடைக்காமல் ஏமாற்றம் ; விவசாயிகள் கவலை

/

தேங்காய்க்கு விலை கிடைக்காமல் ஏமாற்றம் ; விவசாயிகள் கவலை

தேங்காய்க்கு விலை கிடைக்காமல் ஏமாற்றம் ; விவசாயிகள் கவலை

தேங்காய்க்கு விலை கிடைக்காமல் ஏமாற்றம் ; விவசாயிகள் கவலை


ADDED : ஜன 16, 2024 10:53 PM

Google News

ADDED : ஜன 16, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;மாநிலத்தில், லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள் உள்ளனர். தேங்காய், கொப்பரை உள்ளிட்ட தேங்காய் மற்றும் அதுசார்ந்த தொழிலில் வருமானம் ஈட்டுகின்றனர். கடந்த ஓரிரு ஆண்டுகளாக, தேங்காய்க்கு உரிய விலையின்றி விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

'ஒரு தேங்காய்க்கு 10 முதல், 12 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைப்பதால், தோட்ட பராமரிப்பு செய்யக்கூட நிதியின்றி தவிக்கிறோம்' என திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கூறி வருகின்றனர்.

தேங்காய்க்கு உரிய விலை வழங்கக்கோரி, பல்வேறு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அறிக்கை:

கடந்த, 2019ல் ஒரு தேங்காய்க்கு, 20 ரூபாய் விலை கிடைத்தது; அச்சமயத்தில் பாமாயில் மீதான இறக்குமதி வரி, 44 சதவீதம். தற்போது, (2024) தேங்காய்க்கு, 10 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது.

தற்போது பாமாயில் மீதான இறக்குமதி வரி, 32 சதவீதமாக இருக்கிறது. இறக்குமதி வரி, 12 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டதன் வாயிலாக, தேங்காய் எண்ணெயை விட பாமாயில், லிட்டருக்கு, 40 ரூபாய் வரை குறைவாக கிடைக்கிறது. எனவே, சோப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், அதிகளவில் பாமாயில் பயன்படுத்த துவங்கி விட்டனர்.

இதனால் தான், தேங்காய் எண்ணெய்க்கு சந்தை இல்லாமல் போனது; உரிய விலையும் கிடைப்பதில்லை. விளைவாக, நம் நாட்டில் உள்ள, 1.10 கோடி தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us