sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.486.47 கோடி கடன் வழங்கல்

/

மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.486.47 கோடி கடன் வழங்கல்

மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.486.47 கோடி கடன் வழங்கல்

மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.486.47 கோடி கடன் வழங்கல்


ADDED : ஜூன் 24, 2025 11:57 PM

Google News

ADDED : ஜூன் 24, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் குறு உணவுப்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டம்.

புதியதாக தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம் பாட்டு திட்டங்களில், தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கி வருகிறது.

கடந்த 2021 - 22 நிதியாண்டில், 111.58 கோடி ரூபாய், 2022 - 23 நிதியாண்டில், 107.61 கோடி, 2023 - 24 நிதியாண்டில், 171.42 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு 2024 - 25 நிதியாண்டில் இதுவரை, 421 பேருக்கு, 96.39 கோடி ரூபாய் என, கடந்த நான்கு ஆண்டுகளில், 1,910 தொழில்முனைவோருக்கு, 129.18 கோடி மானியத்தில், மொத்தம் 486.47 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பல்லடத்தை சேர்ந்த பனியன் தொழிலாளியான கனிமொழி, அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாய் மானியத்தில், 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.

சொந்தமாக பனியன் தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் அவர், 15 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடிவதாகவும்; நல்ல லாபம் பெற முடிவதாகவும், தெரிவித்துள்ளதாக, மாவட்ட தொழில் மையத்தினர் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us