sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உயிர் காக்கும் உன்னத பணியில் முதல் நிலை காப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

/

உயிர் காக்கும் உன்னத பணியில் முதல் நிலை காப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

உயிர் காக்கும் உன்னத பணியில் முதல் நிலை காப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

உயிர் காக்கும் உன்னத பணியில் முதல் நிலை காப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்


ADDED : செப் 14, 2025 02:09 AM

Google News

ADDED : செப் 14, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'பேரிடர் சமயத்தில் அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்கள், உயிர்களை காக்கும் முதல் நிலை காப்பாளர்களாக செயல்பட வேண்டும்' என, தீயணைப்பு துறை அலுவலர் பேசினார்.

ஆண்டுதோறும், செப்., இரண்டாவது சனிக்கிழமை, உலக முதலுதவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், குமார்நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார். திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மாணவ, மாணவியருக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கினர். புயல், வெள்ளம், தீ உள்ளிட்ட பேரிடர் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் விதம் குறித்தும் விளக்கினர். உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கும் முறை குறித்தும், தீயணைப்பு வீரர்கள் பயிற்சி வழங்கினர். மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கற்று கொண்டனர்.

உதவி தீயணைப்பு அலுவலர் பேசுகையில், 'மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை மீட்பதில், அங்குள்ள மக்கள், இளைஞர்கள் தான் முதல் நிலை காப்பாளர்களாக இருந்து, ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டும். இடைபட்ட நேரத்துக்குள் வந்து சேரும் தீயணைப்பு வீரர்கள், மீட்புப்பணியை மேற்கொள்வர். பொதுமக்களே, காப்பாளர்களாக மாறுவதன் வாயிலாக உயிர், உடமை சேதமாவதை பெருமளவில் தவிர்க்க முடியும். குறிப்பாக, கல்லுாரி மாணவ, மாணவியர், பேரிடர் மீட்பு பயிற்சியை பெற்றுக் கொள்வது, அவரவர் பகுதிகளில் ஏற்படும் பாதிப்பில் சிக்குவோரை காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும்,' என்றார்.

மாணவர்களுக்கு பாராட்டு கடந்த, ஜூலை மாதம், திருப்பூர் கல்லுாரி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நகரில், அடுத்தடுத்து, 4 காஸ் சிலிண்டர் வெடித்ததில், தொழிலாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த, 42 கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின. இந்த விபத்து நடந்த நேரத்தில் அருகேயுள்ள சிக்கண்ணா கல்லுாரி மாணவர்கள், கல்லுாரி வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் செடிகளுக்கு நீர் ஊற்றி கொண்டிருந்தனர். வெடி விபத்து நடந்த அடுத்த நிமிடம் அந்த இடத்துக்கு தண்ணீர், வாளியுடன் சென்று, தீயை கட்டுப்படுத்தி, மீட்பு பணியில் ஈடுபட துவங்கினர். இது, பாராட்டுக்குரியது. - வீரராஜ் மாவட்ட உதவி அலுவலர் தீயணைப்பு துறை








      Dinamalar
      Follow us