sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிரிவலப்பாதையில் பசுமை பற்றிப்படரும்

/

கிரிவலப்பாதையில் பசுமை பற்றிப்படரும்

கிரிவலப்பாதையில் பசுமை பற்றிப்படரும்

கிரிவலப்பாதையில் பசுமை பற்றிப்படரும்


ADDED : ஜூன் 02, 2025 06:28 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் ஒரு பகுதியாக, ஊத்துக்குளி அருகே உள்ள கைத்தமலையில், 'ஊத்துக்குளி கைத்தமலை வனம்' உருவாக்கப்பட்டது.

கொரோனா தொற்றுக்கு முன்னதாக, 4,000 மரக்கன்றுகள் நட்டு, தண்ணீர் விட்டு பராமரித்து வளர்க்கப்பட்டது. இன்று, குறுங்காடு போல் பசுமையாக மாறியுள்ளது. 'துளிகள் காங்கயம்' அமைப்புடன் இணைந்து, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. கைத்தமலையின் கிரிவல பாதையில், பக்தர்களுக்கு பயனளிக்கும் வகையிலான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

கொங்கு மெட்ரிக் பள்ளி நிர்வாகம், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு வளர்க்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி யில், தன்னார்வலர்கள், பசுமை ஆர்வலர்கள் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

ஆலமரம், அத்தி, மருதம், வேம்பு, புங்கன், இலுப்பை, சிரக்கொன்றை, வாகை, அரசமரம், புன்னை ஆகிய ரகங்களில், பெரிய மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, 'வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us