sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நவராத்திரி விழா துவக்கம் : கோவில்களில் சிறப்பு பூஜை

/

நவராத்திரி விழா துவக்கம் : கோவில்களில் சிறப்பு பூஜை

நவராத்திரி விழா துவக்கம் : கோவில்களில் சிறப்பு பூஜை

நவராத்திரி விழா துவக்கம் : கோவில்களில் சிறப்பு பூஜை


ADDED : செப் 22, 2025 10:15 PM

Google News

ADDED : செப் 22, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:

உடுமலை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. அம்மனுக்கு பல்வேறு திரவியங்களில் மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாமம், தீபாராதனை நடந்தது. மாலை, 6:15 மணிக்கு, அம்மன் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. வரும், 2ம் தேதி வரை, நவராத்திரி விழாவில், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி, நேற்று கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், காலை, மாலை நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டனர்.

இதே போல், வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் மாரியம்மன்கோவில், சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில்களில் நேற்று கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.






      Dinamalar
      Follow us