ADDED : ஜூன் 12, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை வழியாக தினமும், நான்கு ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில்களில் பல்வேறு நகரங்களுக்கு நுாற்றுக்கணக்கானோர் செல்கின்றனர். குற்றச்செயல்களை தடுக்கவும், பயணியர் பாதுகாப்பு கருதியும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை நகர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.