/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீஅண்ணமார் ஜாய் இ-பைக் ஷோரூம் திறப்பு
/
ஸ்ரீஅண்ணமார் ஜாய் இ-பைக் ஷோரூம் திறப்பு
ADDED : ஜன 26, 2024 01:25 AM

திருப்பூர்;திருப்பூர் - பல்லடம் ரோடு, வின்னர்ஸ் டவர்ஸில், ஸ்ரீ அண்ணமார் ஜாய் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
சோழா குரூப் ஆப் மில்ஸ் தலைவர் அப்புக்குட்டி ஷோரூமை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஜாய் இ-பைக் நிறுவன பொது மேலாளர் ஜெகன், மண்டல மேலாளர் விஜய் கணேஷ் பங்கேற்றனர். நேற்று விற்பனையான வாகனங்களுக்கு, தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
ஷோரூம் உரிமையாளர் மயில்சாமி கூறியதாவது:
ஜாய் நிறுவனம், மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரித்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையாளராக எங்கள் ஷோரூம் செயல்படுகிறது. 80 ஆயிரம் ரூபாய் முதல் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால், 130 கி.மீ., வரை பயணம் செய்யலாம். 60 ஆயிரம் ஹெ பேட்டரி வாரண்டி உள்ளது. இந்நிறுவன தயாரிப்பான மிகாஸ் மாடலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

