sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டில் வாகன 'பார்க்கிங்' போக்குவரத்துக்கு இடையூறு

/

ரோட்டில் வாகன 'பார்க்கிங்' போக்குவரத்துக்கு இடையூறு

ரோட்டில் வாகன 'பார்க்கிங்' போக்குவரத்துக்கு இடையூறு

ரோட்டில் வாகன 'பார்க்கிங்' போக்குவரத்துக்கு இடையூறு


ADDED : செப் 14, 2025 02:06 AM

Google News

ADDED : செப் 14, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;மேற்கு பல்லடத்தில், வாகனங்கள், ரோட்டிலேயே பார்க்கிங் செய்யப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

பல்லடம் நகராட்சி, மேற்கு பல்லடத்தில், ஏராளமான குடியிருப்புகள், கடைகள் வணிக வளாகங்கள் உள்ளன. மேலும், பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பெரும்பாலான வங்கிகளும் இங்கு தான் அமைந்துள்ளன.

இதன் காரணமாக, வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. தினசரி, பள்ளி கல்லுாரி செல்லும் வாகனங்கள், பனியன் கம்பெனி வேன்கள் வந்து செல்கின்றன.

இவ்வாறு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் உள்ள வங்கி கட்டடங்களில், முறையான பார்க்கிங் வசதி கிடையாது. வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள், வாகனங்களை ரோட்டிலேயே பார்க்கிங் செய்கின்றனர்.

இதனால், இவ்வழியாக வரும் வாகனங்கள், நெரிசலில் சிக்கி திணறுகின்றன. தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியமான வழி என்பதால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்படும். எனவே, இப்பகுதியில், வாகன பார்க்கிங்கை ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us