sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விசைத்தறி காடா துணிகள் மதிப்புக்கூட்டு பொருளாகும்

/

விசைத்தறி காடா துணிகள் மதிப்புக்கூட்டு பொருளாகும்

விசைத்தறி காடா துணிகள் மதிப்புக்கூட்டு பொருளாகும்

விசைத்தறி காடா துணிகள் மதிப்புக்கூட்டு பொருளாகும்


ADDED : ஜூன் 19, 2025 05:02 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம : பல்லடம் அருகே உருவாகி வரும் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் விரைவில் செயல்பாட்டை துவக்குகிறது. இதன் மூலம், விசைத்தறி காடா துணிகள் மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றப்பட்டு விற்பனைக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும்.

பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி காடா உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. இங்கு உற்பத்தியாகும் காடா துணிகள், வட மாநிலங்களில் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்பட்டு விற்பனைக்கு செல்கின்றன. துணிகளை இங்கேயே மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவதற்காக, பொதுப்பயன்பாட்டு மையம் அமைக்க, கடந்த 2018ல் திட்டமிடப்பட்டது. இதற்காக கேத்தனுார் கிராமத்தில், 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கின.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் விசைத்தறியாளர்களின் பங்களிப்பு என, 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொது பயன்பாட்டு மையம் அமைக்கும் பணி துவங்கியது. கட்டட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

---

கேத்தனுாரில் உருவாகியுள்ள விசைத்தறி பொது பயன்பாட்டு மையம்.

அண்டை மாநிலங்களுடன் போட்டி போட்டு விற்கலாம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தியாகும் காடா துணிகள், மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற மேற்கொள்ளப்படும் பணிகளால் கூடுதல் செலவு மற்றும் காலதாமதம் ஆகிறது. பொது பயன்பாட்டு மையம் பயன்பாட்டுக்கு வரும்போது, துணிகள் இங்கேயே மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்பட்டு, விறபனைக்கு தயாராகும் என்பதால், அண்டை மாநிலங்களுடன் போட்டி போட்டு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.விசைத்தறிகள், சைசிங், பிரின்டிங் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளுடன் பொது பயன்பாட்டு மையம் அமைகிறது. கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், இயந்திரங்கள் நிறுவுவதற்கான டெண்டர் விடும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும், ஒரு சில மாதங்களில் பொது பயன்பாட்டு மையம் முழுமையான பயன்பாட்டுக்கு வரும்.- பாலசுப்ரமணியம், செயலாளர், திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கம்.








      Dinamalar
      Follow us