/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு விரைவாக்க ஆர்ப்பாட்டம்
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு விரைவாக்க ஆர்ப்பாட்டம்
ADDED : மே 27, 2025 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவுபடுத்தக்கோரியும், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரியும், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நந்தகோபால், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் கதிரவன், மக்கள் பாதுகாப்பு அமைப்பு தலைவர் கார்மேகம் உட்பட, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர்.