sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்

/

பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்

பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்

பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்


ADDED : மே 19, 2025 11:24 PM

Google News

ADDED : மே 19, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை கல்பனா ரோட்டில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் பிளக்ஸ் பேனர்களை, அப்புறப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை கல்பனா ரோட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. மேலும், பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கும் அந்த ரோடு பிரதானமாக உள்ளது. நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அவ்வழியாக கடந்து செல்கின்றன.

விளையாட்டு மைதானத்தின் அருகிலும், எதிர்பகுதியிலும் வரிசையாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பலத்த காற்று வீசுவதால், பேனர்கள் அங்குமிங்குமாய் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அசைகின்றன.

விளையாட்டு மைதானத்துக்கு வருவோர் பலரும், ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர். மேலும் அருகிலுள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவோரும், வாகனங்களை அப்பகுதிகளில் நிறுத்துகின்றனர்.

அந்த பகுதியில் ஆபத்தான முறையில் இருக்கும், பிளக்ஸ் பேனர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us