sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோடு படுமோசம் வாகனம் தடுமாற்றம்

/

ரோடு படுமோசம் வாகனம் தடுமாற்றம்

ரோடு படுமோசம் வாகனம் தடுமாற்றம்

ரோடு படுமோசம் வாகனம் தடுமாற்றம்


ADDED : ஜூன் 20, 2025 02:08 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு எஸ்.வி., காலனி பரபரப்பான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதி. ஏராளமான குடியிருப்புகள் இப்பகுதியில் உள்ளன.

எஸ்.வி., காலனி பிரதான ரோட்டிலிருந்து பல்வேறு குறுக்கு ரோடுகள் பிரிந்து செல்கின்றன. இதில், திருநீலகண்டபுரம் செல்லும் ரோடு ஒரு முக்கியமான ரோடாக உள்ளது.

குழாய் பதிப்பு பணிக்கு குழி தோண்டும் பணி நடந்தது. அதன் பின், குழாய் பதிப்பு பணிகள் முடிந்ததும் தோண்டிய குழியை மண் போட்டு மூடி விட்டனர்.இந்த ரோடு தற்போது ஜல்லி கற்கள் மற்றும் குண்டும் குழியுமாக மண் ரோடாக மாறி விட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

வாகன ஓட்டிகள் தடுமாறி சிறு விபத்துகள் ஏற்படுவதும், வாகனங்கள் பழுதடைவதும் தொடர்ந்து நடக்கிறது.

தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ரோட்டை முழுமையாக சீரமைத்து புதிய ரோடு அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us