ADDED : ஜன 26, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 பேர் காய மடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து, 22 பேருடன் சுற்றுலா வேன் தாராபுரம் வழியாக பவானி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, தாராபுரம், மணக்கடவு அருகே வேன் வந்த போது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், டிரைவர் உள்ளிட்ட, 20 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

