sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ்காரர் மீது தாக்குதல்; மூவருக்கு 7 ஆண்டு சிறை

/

போலீஸ்காரர் மீது தாக்குதல்; மூவருக்கு 7 ஆண்டு சிறை

போலீஸ்காரர் மீது தாக்குதல்; மூவருக்கு 7 ஆண்டு சிறை

போலீஸ்காரர் மீது தாக்குதல்; மூவருக்கு 7 ஆண்டு சிறை


ADDED : செப் 18, 2025 11:31 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய மூவருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில், கடந்த, 2022, முதல்நிலை காவலராக பணியாற்றியவர் மகாதேவன், 35. காவலர் அருள்குமார், 32. இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, டூவீலரில் வந்த, 3 பேரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால், அருள்குமாரின் தலையில் தாக்கிவிட்டு, தப்பினர்.அவிநாசி போலீசில் அருள்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, திருநெல்வேலி மானுாரை சேர்ந்த ராஜ்குமார், 31, சுரேஷ்குமார், 35, மார்டின், 41 ஆகிய, 3 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது.நேற்று இவ்வழக்கில், நீதிபதி மோகனவள்ளி வழங்கிய தீர்ப்பில், குற்றவாளிகள், 3 பேருக்கும், தலா, 7 ஆண்டு சிறை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் செந்தில்குமார், ஆஜரானார்.






      Dinamalar
      Follow us