sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டூவீலர் மீது சரக்கு வேன் மோதி தந்தை - மகன் பலியான சோகம்

/

டூவீலர் மீது சரக்கு வேன் மோதி தந்தை - மகன் பலியான சோகம்

டூவீலர் மீது சரக்கு வேன் மோதி தந்தை - மகன் பலியான சோகம்

டூவீலர் மீது சரக்கு வேன் மோதி தந்தை - மகன் பலியான சோகம்


ADDED : மே 26, 2025 11:55 PM

Google News

ADDED : மே 26, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; திருப்பூரில் சரக்கு வேன் டூவீலர் மீது மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர்.

திருப்பூர், எம்.எஸ்., நகரை சேர்ந்தவர் திருமலைசாமி, 53; கட்டட தொழிலாளி. இவரது மகன் ஜீவானந்தம், 29; பனியன் தொழிலாளி. இருவரும் நேற்று முன்தினம் இரவு பெருமாநல்லுாரில் இருந்து வாவிபாளையம் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.

கூலிபாளையத்தில் இருந்து பெருமாநல்லுார் நோக்கி சரக்கு வேன் சென்றது. வேனின் ஒரு பகுதி கதவு முழுமையாக மூடப்படாமல், பின்னால் இருந்த கொக்கியில் மாட்டப்பட்டு இருந்தது. டூவீலரில் சென்ற இருவர் மீது, கதவு பகுதி மோதி விபத்து ஏற்பட்டது. இருவரும் படுகாயமடைந்தனர். அதே இடத்தில் தந்தை பரிதாபமாக இறந்தார்.

மகனை மீட்டு கோவைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். திருமுருகன்பூண்டி மற்றும் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us