sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விற்கப்படும் 'ரிசர்வ் சைட்'கள் மீட்டெடுக்க வலியுறுத்தல்

/

விற்கப்படும் 'ரிசர்வ் சைட்'கள் மீட்டெடுக்க வலியுறுத்தல்

விற்கப்படும் 'ரிசர்வ் சைட்'கள் மீட்டெடுக்க வலியுறுத்தல்

விற்கப்படும் 'ரிசர்வ் சைட்'கள் மீட்டெடுக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 09, 2025 12:17 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; 'பூங்கா, சமுதாயக்கூடம் மற்றும் சிறுவர் பள்ளிகளுக்கு என ஒதுக்கப்பட்ட நிலங்களை, உள்ளாட்சிகள் வசம் ஒப்படைக்க வேண்டும்' என, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள், தனியார் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டுமனைக்கு ஒப்புதல் பெறும் போது, சம்பந்தப்பட்ட வீட்டுமனைகளில் உள்ள பூங்கா, சமுதாயக்கூடம் மற்றும் சிறுவர் பள்ளிகளுக்கு என ஒதுக்கப்படும் நிலங்கள் (ரிசர்வ் சைட்), நகர் ஊரமைப்பு துறையால் ஒப்புதல் பெறப்பட்டு பொது ஒதுக்கீடு செய்யப்படும்.

இவை, ஊராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தான பத்திரம் வாயிலாக ஒப்படைக்கப்படும். பெரும்பாலான மனை விற்பனையாளர்கள், பொது ஒதுக்கீட்டு நிலங்களை விதிமுறைப்படி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

பல்லடம் பகுதி சமூக ஆர்வலர் நாகூர் மீரான், திருப்பூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

பல வீட்டுமனை உரிமையாளர்கள் பொது ஒதுக்கீட்டு நிலங்களை, நெடுங்காலம் தங்கள் வசம் வைத்திருந்து, அவற்றை விற்று விடுகின்றனர். இந்த முறைகேடுக்கு உள்ளாட்சி துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். மனைப்பிரிவு வரைபடத்தில் உள்ளவாரே, பொது ஒதுக்கீட்டு நிலங்கள் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

அதில், கட்டுமானங்கள் இருப்பின் அனுமதியற்ற அபிவிருத்தியாக கருதி அப்புறப்படுத்த வேண்டும் என, மதுரை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

எனவே, மாவட்டம் முழுவதும் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட பொது ஒதுக்கீட்டு நிலங்களை மீட்கவும், விதிமீறி கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்றி, உள்ளாட்சி அமைப்புகள் வசம் நிலங்களை ஒப்படைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது






      Dinamalar
      Follow us