/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ADDED : மே 27, 2025 06:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.
உடுமலை அன்பால் இணைவோம் அமைப்பின் குழுவினர் இணைந்து, சுற்றுப்பகுதியில் உள்ள 50 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சி உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ரகு, சமூக ஆர்வலர்கள் சரவணக்குமார், சிவக்குமார், பாண்டியன், ரமேஷ் பங்கேற்றனர். நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் ஜானகிராம் ஏற்பாடு செய்தார்.