sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மானாவாரிக்கு கைகொடுக்குமா மழை: எதிர்பார்ப்பில் விவசாயிகள்

/

மானாவாரிக்கு கைகொடுக்குமா மழை: எதிர்பார்ப்பில் விவசாயிகள்

மானாவாரிக்கு கைகொடுக்குமா மழை: எதிர்பார்ப்பில் விவசாயிகள்

மானாவாரிக்கு கைகொடுக்குமா மழை: எதிர்பார்ப்பில் விவசாயிகள்


ADDED : மார் 18, 2025 10:09 PM

Google News

ADDED : மார் 18, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; உடுமலை சுற்றுப்பகுதிகளில், விவசாய சாகுபடிக்கு, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைகள், ஆதாரமாக உள்ளன.

இந்த இரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில், மானாவாரியாக மக்காச்சோளம், சோளம், தட்டைப்பயறு, கொத்தமல்லி, கொண்டைக்கடலை உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட சில பகுதிகளில், கோடை கால மானாவாரி சாகுபடியும் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, தீவன தேவைக்காக, சோளம் மற்றும் சில பகுதிகளில், கம்பு விதைக்கின்றனர்.

அவ்வகையில், சோளம் விதைப்பு செய்துள்ள விவசாயிகள் கோடை மழை கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, கோடை உழவு செய்து, மழை நீரை சேகரிப்பது வழக்கம். அதே போல், மானாவாரி விதைப்பும் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த வாரம் பல்வேறு பகுதிகளில், கோடை மழை பெய்தது; உடுமலை பகுதியில், விரைவில், இம்மழை பெய்து, மானாவாரி சாகுபடி பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us