/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் கொலை வழக்கு; சென்னைக்கு சென்ற தனிப்படை
/
பெண் கொலை வழக்கு; சென்னைக்கு சென்ற தனிப்படை
ADDED : செப் 18, 2025 11:25 PM
திருப்பூர்; காங்கயத்தில், மனைவியை கொலை செய்து, தப்பிய வடமாநில தொழிலாளியை தேடி தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த கவுரங்க மண்டல், 37. மனைவி ரிங்கு மண்டல், 31. தம்பதியினர், காங்கயம், முத்துார் ரோடு படியாண்டிபாளையத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதில், மனைவியை கட்டையால் அடித்து கயிறு மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு கணவர் தப்பி சென்றார்.
சடலத்தை கைப்பற்றிய காங்கயம் போலீசார் விசாரித்தனர். தலைமறைவான கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரயிலில், சென்னைக்கு தப்பி சென்றது தெரிந்தது. தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று, கவுரங்க மண்டலை தேடி வருகின்றனர்.