/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மூதாட்டியிடம் 5 சவரன், பணம் கொள்ளை
/
மூதாட்டியிடம் 5 சவரன், பணம் கொள்ளை
ADDED : ஜூன் 27, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வந்தவாசி,:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஊத்துக்குளத்தை சேர்ந்தவர் புஷ்பா, 65. பெட்டி கடை வைத்து, தனியாக வசிக்கிறார்.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில் மூதாட்டி வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள்,புஷ்பா படுத்திருந்த தலையணையின் கீழ் இருந்த சாவியை எடுத்து, வீட்டில் பீரோவை திறந்து அதிலிருந்த, 5 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர்.
பின், புஷ்பாவின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றபோது, அவர் கூச்சலிட்டதால், கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
தெள்ளார் போலீசார் விசாரிக்கின்றனர்.