/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
2 பைக்குகளில் 6 பேர் பயணம் பஸ் மோதியதில் இருவர் பலி
/
2 பைக்குகளில் 6 பேர் பயணம் பஸ் மோதியதில் இருவர் பலி
2 பைக்குகளில் 6 பேர் பயணம் பஸ் மோதியதில் இருவர் பலி
2 பைக்குகளில் 6 பேர் பயணம் பஸ் மோதியதில் இருவர் பலி
ADDED : ஜன 27, 2024 01:45 AM
போளூர்:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புத்துாரை சேர்ந்த நண்பர்கள் சுபாஷ் சந்திரபோஸ், 21, சக்திவேல், 21. இவர்கள் இருவரும் தனித்தனி பைக்குகளில், சந்தியா, குணநந்தினி என்ற இரண்டு 18, வயது பெண்கள் மற்றும் இரு நண்பர்களுடன் பர்வத மலைக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் ஆறு பேரும் இரண்டு 'ஹோண்டா' பைக்குகளில் சென்றனர்.
போளூர் பை-பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, போளூரிலிருந்து செஞ்சி சென்ற தனியார் பஸ், ஹெல்மெட் அணியாமல் சென்ற சுபாஷ் சந்திரபோஸ், சக்திவேல், குணநந்தினி சென்ற பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் இருந்து மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டதில், சுபாஷ் சந்திரபோஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சக்திவேல், வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். குணநந்தினி காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார். போளூர் போலீசார்விசாரிக்கின்றனர்.

