sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

நந்தி பகவான், சூரிய பகவானுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர்

/

நந்தி பகவான், சூரிய பகவானுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர்

நந்தி பகவான், சூரிய பகவானுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர்

நந்தி பகவான், சூரிய பகவானுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர்


ADDED : ஜன 17, 2024 01:23 PM

Google News

ADDED : ஜன 17, 2024 01:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை : உழவர் திருநாளையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நந்தி பகவான் மற்றும் சூரிய பகவானுக்கு, அருணாசலேஸ்வரர் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.உழவனின் நண்பனாக விளங்கும், கால்நடைகளை போற்றும் வகையில், மாட்டு பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள, 12 அடி உயர பெரிய நந்தி பகவான், கோவில் கொடிமரம் அருகிலுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள நந்திக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், பெரிய நந்தி பகவானுக்கு, வண்ண மலர்கள், ஆப்பிள், வாழைப்பழம், போன்ற பல்வேறு வகையான பழங்கள், லட்டு, அதிரசம், முருக்கு, சீடை, பிஸ்கட், உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள், கத்திரிக்காய், முருங்கை, அவரை, வாழைக்காய், உள்ளிட்ட பல்வேறு காய்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் என, 108 வகையான, மாலைகளால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு, உண்ணாமுலைம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், நந்திபகவானுக்கும், பின், ராஜகோபுரம் அருகிலுள்ள திட்டி வாயலில், சூரியபகவானுக்கும் காட்சி அளித்தனர். இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவில் கோசாலையில் பசுக்களை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.






      Dinamalar
      Follow us