ADDED : ஜூலை 11, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் கல்லுாரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
விழுப்புரம் வி.ஜி.பி., நகரை சேர்ந்தவர் சம்சுதின்,57; இவரது மகள் சஜினாபேகம்,23; இவர், விழுப்புரம் தனியார் நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 8ம் தேதி காலை வீட்டிலிருந்து கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில், தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.
இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.