/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மகளிர் கல்லுாரியில் 24ம் தேதி கலந்தாய்வு
/
அரசு மகளிர் கல்லுாரியில் 24ம் தேதி கலந்தாய்வு
ADDED : ஜூன் 21, 2024 04:38 AM
விழுப்புரம் : விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 24ம் தேதி துவங்குகிறது.
கல்லுாரி முதல்வர் தாமோதரன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அரசு விதிமுறைகளின் படி, கடந்த 10ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடந்தது.
இந்த கலந்தாய்வில் நிரப்பப்படாத காலி இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 24ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. சேர்க்கை காலியிடங்கள் குறித்த விபரங்களை கல்லுாரியின் தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள மாணவிகளுக்கு மொபைல் போனில் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தகவல் வந்த தகுதியுள்ள மாணவிகள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.