sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அவதுாறு வழக்கில் மாஜி அமைச்சர் கோர்ட்டில் வாக்குமூலம்

/

அவதுாறு வழக்கில் மாஜி அமைச்சர் கோர்ட்டில் வாக்குமூலம்

அவதுாறு வழக்கில் மாஜி அமைச்சர் கோர்ட்டில் வாக்குமூலம்

அவதுாறு வழக்கில் மாஜி அமைச்சர் கோர்ட்டில் வாக்குமூலம்


ADDED : ஜூலை 11, 2024 05:32 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் அரசியல் விமர்சகர் மீதான அவதுாறு வழக்கில், முன்னாள் அமைச்சர் சண்முகம், திண்டிவனம் கோர்ட்டில் ஆஜராகி பிரமாண வாக்குமூலம் அளித்தார்.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகம், கடந்தாண்டு மார்ச் 11ம் தேதி ரோஷணை போலீசில் புகார் அளித்தார். அதில், தான் சாதியை குறிப்பிட்டு பேசியதாக அவதுாறு பரப்பிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, யூ டியூப் பத்திரிகையாளர் கவுதமன் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாததால், புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்தாண்டு மே 15ம் தேதி திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், சண்முகம் கொடுத்துள்ள புகார் மீது நடவடிக்கை எடுத்து, கோர்ட்டிற்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், ரோஷணை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலை முன்னாள் அமைச்சர் சண்முகம் நேற்று காலை 11:30 மணிக்கு, திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்-1ல் ஆஜராகி, அரசியல் விமர்சகர் ரவீந்திரன்துரைசாமி, யூ டியூப் பத்திரிகையாளர் கவுதமன் மீதான புகாரில் கூறியிருந்த குற்றச்சாட்டுகளை பிரமாண வாக்குமூலமாக கொடுத்தார். அதனை மாஜிஸ்திரேட் கமலா பதிவு செய்தார்.






      Dinamalar
      Follow us