/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில் மகா சண்டி யாகம்
/
ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில் மகா சண்டி யாகம்
ADDED : ஜூலை 29, 2024 05:17 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துார் ஸ்ரீராம் சி.பி.எஸ்.சி.,பள்ளியில் மகா சண்டி யாகம் நடந்தது.
திண்டிவனம்-புதுச்சேரி சாலையிலுள்ள ஓமந்துார் பள்ளியில், ஸ்ரீராம் டிரஸ்ட் சார்பில் நேற்று முன்தினம் மகா சண்டி யாகம் துவங்கியது. யாகத்தை நேபாள் நாட்டை சேர்ந்த மகந்த மன்கிரி தலைமையில், காசியை சேர்ந்த 6 சிவாச்சாரியர்கள் முன்னின்று நடத்தினர்.
துவக்க விழாவில், பள்ளியின் தாளாளர் முரளிரகுராமன், நிர்வாகி ஹரிகிருஷ்ணன், தென்கோடிப்பாக்பஞ்சாயத்து தலைவர் ராஜசேகர், முன்னாள் தலைவர் மல்லிகா, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மகா சண்டி யாகம் ஆக.,4 ம் தேதி வரை நடக்கின்றது. ஏற்பாடுகளை ஸ்ரீராம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.