sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புதுச்சேரி சாராயம் குடித்த மேலும் ஒருவர் 'அட்மிட்'

/

புதுச்சேரி சாராயம் குடித்த மேலும் ஒருவர் 'அட்மிட்'

புதுச்சேரி சாராயம் குடித்த மேலும் ஒருவர் 'அட்மிட்'

புதுச்சேரி சாராயம் குடித்த மேலும் ஒருவர் 'அட்மிட்'


ADDED : ஜூலை 10, 2024 11:42 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அதையொட்டி கடந்த 8ம் தேதி மாலை முதல், மதுபான கடைகள் மூடப்பட்டன.

இதனால், தொகுதியை சேர்ந்த மது பிரியர்கள் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று மது அருந்தினர். அவ்வாறு விக்கிரவாண்டி அடுத்த வேம்பி மதுரா பூரி குடிசை கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சக்திவேல், 52, பிரபு, 35, ஆகியோர், கடந்த 8ம் தேதி புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு சென்று, அங்கிருந்து சாராயம் வாங்கி வந்து தங்கள் ஊரைச் சேர்ந்த ராஜா, 37, சுரேஷ்பாபு, 36, பிரகாஷ், 38, காளிங்கராஜ், 47, ஆகியோருடன் சேர்ந்து குடித்தனர்.

அன்று இரவு 6 பேருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று காலை அதே ஊரைச் சேர்ந்த மணி, 52, என்பவர் புதுச்சேரி சாராயம் குடித்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்களில் 5 பேர் குணமடைந்ததால், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பிரகாஷ், மணி ஆகியோருக்கு மஞ்சள்காமாலை உள்ளதால், இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவம் குறித்து, கஞ்சனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us