sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலை பணி தடுத்து நிறுத்தம்: அரசு பஸ் சிறைபிடிப்பு

/

சாலை பணி தடுத்து நிறுத்தம்: அரசு பஸ் சிறைபிடிப்பு

சாலை பணி தடுத்து நிறுத்தம்: அரசு பஸ் சிறைபிடிப்பு

சாலை பணி தடுத்து நிறுத்தம்: அரசு பஸ் சிறைபிடிப்பு


ADDED : ஜூலை 12, 2024 06:19 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: நிறுத்தப்பட்ட தார் சாலையை மீண்டும் துவங்கி முடிக்க வலியுறுத்தி, கொமடிப்பட்டு கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

கிளியனுார் அடுத்த கொமடிப்பட்டு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள ஆதிதிராவிட மக்கள் சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையை நில ஆர்ஜிதம் செய்து, தார் சாலை அமைக்கும் பணி சில தினங்களுக்கு முன் துவங்கியது.

இந்த தார் சாலை உள்ள பகுதி தங்களுக்கு சொந்தமான இடம் எனக் கூறி ஒரு சிலர் பணியை தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8:45 மணிக்கு, உப்புவேலுார் - தலக்காணிக்குப்பம் சாலையில் திண்டிவனம் சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், சாலை அமைக்கும் பணியை எதிர்க்கும் நபர்களிடமும், தாசில்தார் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையேற்று பொது மக்கள் மறியலை கைவிட்டு 9:15 மணியளவில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us