sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா; மரக்காணத்தில் போலீஸ் விசாரணை

/

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா; மரக்காணத்தில் போலீஸ் விசாரணை

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா; மரக்காணத்தில் போலீஸ் விசாரணை

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா; மரக்காணத்தில் போலீஸ் விசாரணை


ADDED : செப் 12, 2025 07:57 AM

Google News

ADDED : செப் 12, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; மரக்காணம் அருகே கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சுற்றுப்பகுதி மீனவ கிராமத்தினர், நேற்று முன்தினம் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, கடலில் கருப்பு நிற பிளாஸ்டிக் பை மிதந்து வந்துள்ளது.

மீனவர்கள் அதை எடுத்து படகில் வைத்து பிரித்து பார்த்துள்ளனர். அதனுள்ளே, 10 பைகளில் 40 கிலோ எடை உள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது. இதனால் படகில் அந்த கஞ்சா பொட்டலம் பையை எடுத்து கரைக்கு வந்த மீனவர்கள், அதனை நேற்று காலை மரக்காணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அதனை பறிமுதல் செய்த போலீசார் கூறுகையில், 'கடல் மார்க்கமாக வெளி மாநிலங்களுக்கோ அல்லது இலங்கைக்கோ கஞ்சா கடத்தி சென்ற கும்பல், போலீசிற்கு பயந்து கடலில் கஞ்சா பொட்டலங்களை வீசியிருக்கலாம் என, தெரிகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், ஏற்கனவே கஞ்சா, குட்கா விற்பனை அதிகரித்து வரும் நிலையில், தற்போது மாவட்ட எல்லையில், கடல் மார்க்கமாக கஞ்சா பைகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us