ADDED : ஜன 21, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த நாமக்கல் மாவட்ட வாலிபர் இறந்தார்.
நாமக்கல் மாவட்டம், காடச்சநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் மகன் சச்சின் என்கிற கணபதி ஆகாஷ், 23; இவர், நேற்று முன்தினம் தனது யமஹா பைக்கில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்றார். பின்னால், நண்பர் அரிதாஸ் அமர்ந்து சென்றார்.
விழுப்புரம் அடுத்த கொளத்துார் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, முன்னால் பைக்கில் சென்ற திருப்பாச்சனுாரைச் சேர்ந்த ரத்தினம், 32; என்பவர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.
இதில், பின்னால் சென்ற சச்சின் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து, சென்னை பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

