sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு வானுார் அருகே துணிகரம்

/

வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு வானுார் அருகே துணிகரம்

வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு வானுார் அருகே துணிகரம்

வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு வானுார் அருகே துணிகரம்


ADDED : மே 26, 2025 11:37 PM

Google News

ADDED : மே 26, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகைகள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வானுார் அடுத்த ராயப்பேட்டை ஆசாத் வீதியை சேர்ந்தவர் ஜியாவுல்லக். இவர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன், கடந்த 23ம் தேதி, வீட்டின் ஒரு அறையில் துாங்கினர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த ஜியாவுல்லக் மற்றொரு அறைக்குள் சென்றுபார்த்தபோது, பீரோவை உடைத்து 5 சவரன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, 2 மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்தபோது, பொதுமக்கள் கூச்சலிட்டதால் தப்பிச் சென்றது தெரியவந்தது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் ஜாப்பர் என்பவரது வீட்டில் பணம், நகை திருடு போனது. தற்போது மீண்டும் ஜியாவுல்லக் வீட்டில் நகைகள், பணம் திருடப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து ஜியாவுல்லக் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us