/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலிபர் தற்கொலை; போலீஸ் விசாரணை
/
வாலிபர் தற்கொலை; போலீஸ் விசாரணை
ADDED : ஜன 19, 2024 07:34 AM
விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அருகே ஏரிக்கரையில் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றர்.
விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி.மேலக் கொந்தையைச் சேர்ந்தவர் அரவிந்த்ராஜ், 24; ஐ.டி.ஐ., படித்துள்ளார். சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். பொங்கல் விடுமுறை கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 16ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக பைக்கில் சென்றார். வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று காலை மேலகொந்தை ஏரிக்கரையில் உள்ள புளிய மரத்தில் வேட்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

